tamilni 285 scaled
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான பதவி உயர்வு குறித்து ஆலோசனை

Share

அரச ஊழியர்களுக்கான பதவி உயர்வு குறித்து ஆலோசனை

அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியது அவர்களின் திறமைக்கு ஏற்பவே என அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையில் பொறுப்புணர்வின்மை காரணமாக நாட்டின் நீர் முகாமைத்துவப் பிரச்சினை மோசமடைந்துள்ளது.

எனது அமைச்சில் உள்ள எந்தவொரு அதிகாரியும் தமது பொறுப்பையும், பொறுப்புக்கூறலையும் நிறைவேற்றவில்லை என்றால் இது தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவர்கள் குறித்து அமைச்சின் செயலாளர் ஊடாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாம் ஒரு நாடாக உயர வேண்டுமானால், இந்த நாட்டில் உள்ள அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியது அவர்களின் சேவைக் காலத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக அவர்களின் திறமைக்கு ஏற்பவே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...