அரசியல் இலாபம் பெறும் நோக்கில் செயற்படும் ஜனாதிபதி
இலங்கைசெய்திகள்

அரசியல் இலாபம் பெறும் நோக்கில் செயற்படும் ஜனாதிபதி

Share

அரசியல் இலாபம் பெறும் நோக்கில் செயற்படும் ஜனாதிபதி

அண்மையில் நடைபெற்ற மடு திருப்பதி நிகழ்வில் கலந்து கொண்ட போது,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் இலாபம் பெற மேற்கொண்ட முயற்சியை இலங்கை கத்தோலிக்கர்கள் விமர்சித்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி மன்னார் மறைமாவட்டத்தில் நடைபெற்ற மடு மாதாவின் பெருவிழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 26 வருடகால உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள பேரதிர்ச்சியை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழர்களுக்கான பல அபிவிருத்தித் திட்டங்களை அறிவித்தார்.

கொழும்பில் இருந்து வடக்கே சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தமிழர்களின் இதயப் பகுதியில் உள்ள மடு மாதா தேவாலயத்தில் நடைபெற்ற நற்கருணைக் கொண்டாட்டத்திற்குப் பிறகு விக்ரமசிங்கவின் அறிவிப்புகளை நாடு முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்தனர்.

ஜனாதிபதியின் அறிவிப்புகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தலைமன்னார் மாவட்டத்தில் இருந்து தலைநகர் கொழும்புக்கு நகரங்களுக்கு இடையேயான தொடருந்து சேவை, வடமேற்கு மன்னாரை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்தல் மற்றும் வவுனியாவில் சீனி தொழிற்சாலை நிறுவப்படும் போன்ற விடயங்கள் அடங்கியிருந்தன.

இந்தநிலையில் ஜனாதிபதியின் உரை ‘முற்றிலும் அரசியல்’ என்று கத்தோலிக்க வார இதழின் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

எந்த ஒரு மத வழிபாட்டுத் தலங்களிலும் அரசியல்வாதிகள் தோன்றவோ அல்லது உரை நிகழ்த்தவோ அனுமதிக்கக் கூடாது என்று அந்த வார இதழ் கூறியுள்ளது. இதேவேளை கத்தோலிக்க அமைப்புகளின் கூட்டமைப்பும், ஜனாதிபதியின் அரசியல் பேச்சு தொடர்பில் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் அரசியல் திட்டங்களுக்காக புனித பலிபீடத்தைப் பயன்படுத்திக்கொள்ள அவருக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதாக அந்த கூட்டமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

273 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலரைக் காயப்படுத்திய உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த விக்கிரமசிங்க தயாராக இல்லை என்று கூட்டமைப்பின் அழைப்பாளர் திலின அழககோன் குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை தடகளப் பயிற்சியின் போது சோகம்: மாணவர் ஒருவர் திடீர் உயிரிழப்பு!

புத்தல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தடகளப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 11-ஆம் தர மாணவர் ஒருவர்,...

20 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மார்ச் 17 முதல் 20 வரை இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது: முக்கிய விவாதங்களுக்குத் திட்டம்!

பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர்...

19 8
செய்திகள்இலங்கை

அஸ்வெசும மார்ச் மாதக் கொடுப்பனவு: நாளை முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவை, நாளை (மார்ச் 12)...

18 10
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது: நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அரசியல் எதிர்ப்புகளை இலக்கு வைத்தோ அல்லது...