இலங்கை மக்களுக்கு பாரிய சிக்கல்
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு பாரிய சிக்கல்

Share

இலங்கை மக்களுக்கு பாரிய சிக்கல்

இலங்கை எதிர்வரும் வருடங்களில் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மேத்திக்கா விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (18.08.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் வருடங்களில் இலங்கை பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும். இந்த குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.

காலநிலை மாற்றமே குடிநீர் தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணமாகக் காணப்படுகின்றது.

இலங்கையின் மழைவீழ்ச்சி காலங்களில் ஏற்கனவே மாற்றங்கள் தென்பட ஆரம்பித்துவிட்டன.

அதன்படி நாட்டில் வழமையாக வருடாந்தம் 2500 மில்லிலீற்றர் மழை பெய்யும். மே முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியிலேயே அதிகளவு மழை பெய்யும்.

தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மே மாதத்தில் மாத்திரம் 2500 மில்லிலீற்றர் மழைபெய்யலாம். இதனை நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு என்பது தவிர்க்கமுடியாதது குறிப்பாக உயர் வலயங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியக்கூறுகள் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 36
விளையாட்டுசெய்திகள்

தடையின்மைச் சான்றிதழ் கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நுவான் துஷார வழக்கு!

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை...

Untitled 35
செய்திகள்உலகம்

“ஹோர்முஸ் நீரிணையை நீங்களே கைப்பற்றுங்கள்”: நட்பு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அதிரடி அழைப்பு!

ஈரானுடனான போர் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எரிபொருள்...

Untitled 34
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத்...

Untitled 33
செய்திகள்உலகம்

எண்ணெய் சந்தையில் கடும் அதிர்ச்சி: ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 106 டொலராக உயர்வு!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...