900 விமானங்கள் வரையில் ரத்து... பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிப்பு
உலகம்செய்திகள்

900 விமானங்கள் வரையில் ரத்து… பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிப்பு

Share

900 விமானங்கள் வரையில் ரத்து… பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிப்பு

ஜப்பானில் புயல் காரணமாக சுமார் 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 240,000 மக்களுக்கு பாதுகாப்பு கருதி வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

பல ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உருவான லான் புயல் செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது.

குறித்த புயல் வடக்கு நோக்கி நகரும் நிலையில் மத்திய மற்றும் மேற்கு ஜப்பானில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசியது. நதிகளில் நீர்மட்டம் அதிகரிக்க, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படலாம் என அதிகாரிகள் தரப்பு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் லான் புயல் மந்தமாக நகர்ந்தது எனவும், அதே பகுதிகளில் பல மணி நேரம் மழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் எச்சரித்திருந்தனர்.

லான் புயல் காரணமாக 2 டசின் மக்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, புயல் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டதுடன், சாலைகள் சில மூடப்பட்டதுடன், ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் கிட்டத்தட்ட 90,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது என உரிய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...