Connect with us

உலகம்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட நிலை!

Published

on

சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட நிலை!

சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட நிலை!

விலைவாசி உயர்வாலும், பணவீக்கத்தாலும் நாட்டு மக்கள் அவதியுற்றுக்கொண்டிருக்க, மக்கள் கவனத்தை திசை திருப்புவதுபோல், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது பிரித்தானிய அரசு.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஒழித்துக்கட்டுவது என கங்கணங்கட்டிக்கொண்டு, தற்போது தெருவிலேயே இறங்கிவிட்டார்கள் புலம்பெயர்தல் துறை அதிகாரிகள்.

சமீப காலமாக, பிரித்தானிய ஊடகங்கள் சில, சட்டவிரோத புலம்பெயர்வோரை சந்தித்து பேட்டிகள் எடுத்துவருகின்றன. ஆரம்பத்தில் அவைகளின் நோக்கத்தைப் பார்த்தால், ஏதோ அவர்களுடைய பரிதாப நிலைமையை வெளிப்படுத்தி அவர்களுக்கு உதவுவதுபோலவே இருந்தது.

ஆனால், உண்மையில் அந்த ஊடகங்கள் வெளியிட்ட விவரங்கள், சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பியுள்ளதுபோல் தெரிகிறது.

உதாரணமாக, சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் சின்னச் சின்ன வேலைகள் செய்து பிழைப்பை நடத்தி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வேலைக்கு வைக்கும் நிறுவனங்களுக்கும், அவர்களுக்கு வீடு வாடகைக்கு விடுவோருக்கும் விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு உயர்த்தியது பிரித்தானிய அரசு.

இந்நிலையில், உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு பிழைப்பு நடத்திவரும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மீது அடுத்த குறிவைக்கப்பட்டுள்ளது.

அதற்காக தெருவிலேயே இறங்கி நடவடிக்கைகளைத் துவக்கிவிட்டார்கள் புலம்பெயர்தல் துறை அதிகாரிகள்.

ஆம், உணவு டெலிவரி செய்வோரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்து, அவர்கள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் என தெரியவந்தால், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாகத் இறங்கியுள்ளார்கள் புலம்பெயர்தல் துறை அதிகாரிகள்.

அவ்வகையில், வரிசையாக பல சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரித்தானியர்களின் வேலையை இந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பறித்துக்கொள்வதாக குற்றம்சாட்டுகிறார்கள் அதிகாரிகள்.

ஆனால், சட்டப்படி உரிமம் பெற்று உணவு டெலிவரி செய்யும் பிரித்தானியர்கள் பலர், இந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோரிடம் கூடுதல் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு பதில் அவர்களை உணவு டெலிவரி செய்யும் வேலையைச் செய்ய அனுமதிப்பதாக, பிரபல பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்18 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன் : 20 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 13, 2024, குரோதி வருடம் புரட்டாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் பூரம்,உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 19 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 19, 2024, குரோதி வருடம் புரட்டாசி 3, வியாழக் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் மகம், பூரம், ரோகிணி...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 18 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 18 செப்டம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 18.09.2024, குரோதி வருடம் புரட்டாசி 2, புதன் கிழமை, சந்திரன் கும்பம்,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 16 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 16 செப்டம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 16.09.2024 குரோதி வருடம் ஆவணி 31, திங்கட் கிழமை, சந்திரன் விருச்சிகம்...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 15 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 15.09.2024, குரோதி வருடம் ஆவணி 30, ஞாயிற்று கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள சேர்ந்த திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்திற்கு...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் 14 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 14 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் 14.09.2024 , குரோதி வருடம் ஆவணி 29, சனிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 13 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் : 13 செப்டம்பர் 2024 இன்றைய ராசிபலன் செப்டம்பர் 13, 2024, குரோதி வருடம் ஆவணி 28 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில்...