இலங்கை வரலாற்றில் அறிமுகமாகும் அதிநவீன பேருந்து சேவை
இலங்கைசெய்திகள்

இலங்கை வரலாற்றில் அறிமுகமாகும் அதிநவீன பேருந்து சேவை

Share

இலங்கை வரலாற்றில் அறிமுகமாகும் அதிநவீன பேருந்து சேவை

கொழும்பு நகரை மையமாக கொண்டு பயணிகள் எழுந்து நின்று பயணிக்கும் வகையில் சொகுசு பேருந்து சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தடைகள் நீக்கப்பட்டவுடன் இந்த பேருந்துகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான யோசனை போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக பேருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான கடனுதவிகளை பெற்றுக்கொள்ள வங்கிகளுடன் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறான பேருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும், இந்த பேருந்தில் 80 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும், 24 பயணிகளுக்கு மாத்திரமே இருக்கைகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் பயன்படுத்தப்படும் எந்தவொரு வங்கி அட்டையிலும் கட்டணத்தை செலுத்தக்கூடிய அத்தகைய உபகரணங்களை இந்த பேருந்துகளில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்கு சில விசேட சலுகைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...