ஒவ்வாமையால் 10 மரணங்கள் - மறைக்கப்படும் மர்மங்கள்
இலங்கைசெய்திகள்

ஒவ்வாமையால் 10 மரணங்கள் – மறைக்கப்படும் மர்மங்கள்

Share

ஒவ்வாமையால் 10 மரணங்கள் – மறைக்கப்படும் மர்மங்கள்

மூன்று மாதங்களில் சுமார் 10 ஒவ்வாமை மரணங்கள் ஏற்படுவது இயல்பானதா என்பதை சுகாதார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சமல் சஞ்சீவ இந்த விடயத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மருந்துப் பாவனையால் நோயாளிகள் உயிரிழந்தமை தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குழு நியமித்து 48 மணித்தியாலங்களின் பின்னர் கம்பஹா வைத்தியசாலையில் மற்றுமொரு நோயாளி மரணம் பதிவாகியுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

Ceftazidime எனும் சக்தி வாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பியின் 11வது ஊசியின் பின்னர் மரணம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அது ஒரு போதும் சாதாரண நிலைமை அல்ல எனவும் சுகாதார அமைச்சின் உண்மையான பிரச்சினையை மூடி மறைப்பதற்காக வெளியிடும் ஊடக அறிக்கை ஊடாக அமைச்சு மக்களை நகைச்சுசையாக எண்ணியுள்ளார்கள் என அவர் மேலும் தெரிலித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 7 பேர் கைது

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதிப் பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நீண்டகாலமாக இயங்கி...

01 10
செய்திகள்உலகம்

ஈரான் போர்: அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’...

30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...