இலங்கையில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வைத்தியர்கள்!
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வைத்தியர்கள்!

Share

இலங்கையில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வைத்தியர்கள்!

சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல் இரகசியமாக வெளிநாடுகளுக்குச் சென்ற வைத்தியர்களின் பெயர்கள் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யுமாறு வைத்திய சபை கோரிய போதிலும் இதுவரையில் அவ்வாறு செய்யப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றன.

கடந்த ஒன்றரை வருடங்களில் விசேட பயிற்சி பெற்று வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய சுமார் 120 வைத்தியர்கள் சேவை ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமான முறையில் மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த வைத்தியர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சில விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுகாதார அமைச்சுக்கு தெரிவிக்காமல் வெளிநாடு செல்லும் வைத்தியர்களிடம் இருந்து 15 மில்லியன் ரூபா இலஞ்சமாக அறவிடப்பட்டாலும், அந்த தொகையை அறவிடுவதற்கு அமைச்சு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அதற்கு பதிலாக 2 மில்லியனை மாத்திரமே வசூலிக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும் கடந்த ஒன்றரை வருடத்தில் இவ்வாறு வந்த 363 வைத்தியர்களில் 120 பேர் எவ்வித தகவலையும் தெரிவிக்காமல் சட்டவிரோதமாக வெளிநாடு திரும்பியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...