புதிய புலம்பெயர்ந்தோர் இல்லாவிட்டால் வீடுகளைக் கட்டுவது சாத்தியமேயில்லை: புதிய அறிவிப்பு
உலகம்செய்திகள்

புதிய புலம்பெயர்ந்தோர் இல்லாவிட்டால் வீடுகளைக் கட்டுவது சாத்தியமேயில்லை: புதிய அறிவிப்பு

Share

புதிய புலம்பெயர்ந்தோர் இல்லாவிட்டால் வீடுகளைக் கட்டுவது சாத்தியமேயில்லை: புதிய அறிவிப்பு

கனடாவுக்கு புதிதாக புலம்பெயர்ந்தோர் வராவிட்டால், கனடாவில் நிலவும் வீடுகள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிப்பது சாத்தியமேயில்லை என்று கூறியுள்ளார் கனடாவின் புதிய புலம்பெயர்தல் அமைச்சர்.

கனடாவில் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினை புதிய புலம்பெயர்ந்தோரால் அதிகரிப்பதாக சமீபத்தில் கனடா வங்கி தெரிவித்திருந்தது.

இது குறித்து கனடாவின் புதிய புலம்பெயர்தல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள Marc Millerஇடம் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், அதனால் கனடாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டம் உள்ளதா என்று கேட்டார்கள்.

அந்தக் கேள்விக்கு இல்லை என பதிலளித்த அமைச்சர் Marc Miller, வெளிநாட்டிலிருந்து கனடாவுக்கு வரும் திறன்மிகுப் பணியாளர்கள் இல்லையென்றால், இப்போது கனடாவில் நிலவும் வீடுகள் பற்றாக்குறைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வீடுகளைக் கட்டுவது சாத்தியமே இல்லை என்றார்.

பதில் கேள்வி எழுப்பிய அமைச்சர்
புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து மக்கள் கேட்கிறார்கள் என்றால் என்ன பொருள், நமக்கு வீடுகளைக் கட்டுவதற்காக தேவைப்படும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் குறைப்பதா அல்லது குடும்பங்கள் இணைவதைத் தடுப்பதா, அப்படியென்றால் அது அவர்களுடைய மன நலனையும், ஏற்கனவே இங்கு வந்துவிட்ட புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களின் நலனை பாதிப்பதா என்று பதில் கேள்வி எழுப்பினார் அமைச்சர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...