கடற்கரையில் மாயமான குழந்தையை தேட மக்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
உலகம்செய்திகள்

கடற்கரையில் மாயமான குழந்தையை தேட மக்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

Share

கடற்கரையில் மாயமான குழந்தையை தேட மக்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

ஒன்ராறியோவிலுள்ள கடற்கரை ஒன்றில் ஆறு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனதாக தகவல் வெளியானதும், கடற்கரைக்கு வந்திருந்த மொத்தக்கூட்டமும் கடலில் இறங்கிய நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

ஒன்ராறியோவின் Edward County beach என்னும் கடற்கரையில் கடந்த வாரம் ஆறு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனாள். தகவலறிந்து கடற்கரைக்கு வந்த பொலிசார் கண்ட காட்சி அவர்களை நெகிழவைத்துள்ளது.

ஆம், குழந்தை கடலில் விழுந்திருக்கலாம் என்ற தகவல் கிடைக்கவே, கடற்கரைக்கு வந்திருந்த மொத்தக் கூட்டமும் கடலில் இறங்கியுள்ளது.

ஒரு வலை போல, பிள்ளையைத் தவறவிட்டுவிடக்கூடாதென எண்ணி, அனைவரும் கடல் நீரை அங்குல அங்குலமாக அலசியுள்ளனர்.

அரை மணி நேரத்துக்குள் அந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளாள். குழந்தையைக் காப்பாற்றுவதற்காக சற்றும் தயங்காமல் கடலில் இறங்கிய பொதுமக்களுக்கு தங்கள் சிறப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share

1 Comment

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...