மாதவிடாய் நாட்களில் தனியாக தங்க வைக்கப்பட்ட இளம்பெண்! பரிதாபமாக பலி
உலகம்செய்திகள்

மாதவிடாய் நாட்களில் தனியாக தங்க வைக்கப்பட்ட இளம்பெண்! பரிதாபமாக பலி

Share

மாதவிடாய் நாட்களில் தனியாக தங்க வைக்கப்பட்ட இளம்பெண்! பரிதாபமாக பலி

நேபாளத்தில் மாதவிடாய் காரணமாக குடியிருப்பில் இருந்து வெளியே தனியாக தங்க வைக்கப்பட்ட இளம் பெண் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

நேபாளத்தின் Baitadi மாவட்டத்தை சேர்ந்த 16 வயது அனிதா சந்த் என்பவரே, மாதவிடாய் காரணமாக தனியாக தங்கியிருந்த நிலையில், பாம்பு தீண்டி மரணமடைந்தவர்.

அவர் தூக்கத்தில் இருந்த போது பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது. chhaupadi எனப்படும் இந்த சட்டத்திற்கு புறம்பான செயலால், 2019-க்கு பின்னர் மரணமடையும் முதல் பெண் இவர் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி, மாதவிடாய் நாட்களில் பெண்களை தனியாக தங்க வைக்கும் இந்த நடைமுறையை அகற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பயனளிக்காமல் போகிறது என்று எதிர்ப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.

chhaupadi எனப்படும் இந்த நடைமுறையானது நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது மாதவிடாய் காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் அசுத்தமாக இருப்பார்கள் என்பதால், அவர்களை தனியாக தங்க வைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், chhaupadi நடைமுறையை பின்பற்ற கட்டாயப்படுத்துபவர்களுக்கு 3 மாத சிறையும் உள்ளூர் பணத்தில் 20 பவுண்டுகள் அபராதமும் விதித்து, 2005ல் தடை செய்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது அனிதா சந்த் மரணமடைந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்த பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். ஆனால் அனிதா சந்த் மரணமடையும் போது அவர் மாதவிடாய் நாட்களில் இல்லை என்றே குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

2019ல் கடைசியாக chhaupadi நடைமுறையால் பெண் ஒருவர் மரணமடைந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக, எதிர்ப்பாளர்கள் திரண்டு 7,000 மாதவிடாய் குடிசைகளை சேதப்படுத்தினர்.

ஆனால் அதன் பிறகு கொரோனா பெருந்தொற்று பரவ, கவனம் அதன் பின்னால் சென்றது எனவும், மீண்டும் நாட்டின் பல பகுதிகளில் மாதவிடாய் குடிசைகள் புதிதாக கட்டப்பட்டது எனவும் கூறுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...