கனடா எல்லை அருகே வனப்பகுதியில் பிள்ளை பெற்றெடுத்த பெண்: வெளிவரும் தகவல்
உலகம்செய்திகள்

கனடா எல்லை அருகே வனப்பகுதியில் பிள்ளை பெற்றெடுத்த பெண்: வெளிவரும் தகவல்

Share

கனடா எல்லை அருகே வனப்பகுதியில் பிள்ளை பெற்றெடுத்த பெண்: வெளிவரும் தகவல்

அமெரிக்க எல்லை அருகே, கியூபெக் வனப்பகுதியில் பெண் ஒருவர் இரவு பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் பொலிசாரால் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிறைமாத கர்ப்பிணி சட்டவிரோதமாக எல்லை கடந்து அமெரிக்கா செல்லவிருந்த நிலையிலேயே அவர் பிள்ளை பெற்றெடுத்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு நம்புகின்றனர்.

கியூபெக் பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், அமெரிக்க எல்லை ரோந்துப்படை அதிகாரிகள் இந்த தகவலை தங்களுக்கு தெரியப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதில் பெண் ஒருவர் மகப்பேறு நேரம் நெருங்கிய நிலையில் காணப்படுவதாக தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த தாயார் ஆண் ஒருவருடனும், இளம்வயது சிறார் ஒருவருடனும் காணப்பட்டதாக கியூபெக் பொலிசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பின்னரே, இந்த மூவரின் உறவுமுறை உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

911 இலக்கத்திற்கு தொடர்புகொண்ட நிலையில், அவர் இருக்கும் இடத்தை உடனடியாக பொலிசார் உறுதி செய்துள்ளனர். சம்பவயிடத்திற்கு பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் செல்லும் போதே, அந்த பெண் பிள்ளை பெற்றெடுத்துள்ளார் எனவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக கியூபெக் மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த நாட்டினர் என்பது உறுதி செய்யப்படும் எனவும், ஆனால் அவர்கள் கனடாவில் சட்டப்பூர்வமாகவே நுழைந்தவர்கள் என்பதுடன், எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என உறுதி செய்துள்ளனர்.

கனடா மண்ணில் அந்த தாயாருக்கு பிள்ளை பிறந்துள்ளதால், அந்த குழந்தை தற்போது கனேடிய குடிமகன் அந்தஸ்தை பெறுகிறார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...