பிரித்தானிய மகாராணியாரின் இறுதி புகைப்படம் தேசிய விருதுக்காக தேர்வு!
உலகம்செய்திகள்

பிரித்தானிய மகாராணியாரின் இறுதி புகைப்படம் தேசிய விருதுக்காக தேர்வு!

Share

பிரித்தானிய மகாராணியாரின் இறுதி புகைப்படம் தேசிய விருதுக்காக தேர்வு!

பிரித்தானியாவில் தேசிய புகைப்பட விருது ஒன்றிற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ள 20 புகைப்படங்களில், மகாராணியாரின் இறுதி நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் புகைப்படங்களுக்கான தேசிய விருது அல்லது, UK Picture Editors’ Guild awards, அல்லது 2022 photo of the year விருது என்று அழைக்கப்படும் விருதுக்காக, 20 புகைப்படங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில், மக்கள் தங்களுக்குப் பிடித்த புகைப்படத்துக்கு வாக்களித்து, அதை 2022ஆம் ஆண்டுக்கான புகைப்படமாக தேர்வு செய்யலாம்.

செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வரை மக்கள் வாக்களிக்கலாம். தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் குறித்த முடிவுகள், அக்டோபர் 16ஆம் திகதி வெளியிடப்படும்.

மகாராணியாரின் இறுதி புகைப்படங்களில் ஒன்று
விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களில் மகாராணியாரின் இறுதி நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

லிஸ் ட்ரஸ் பிரதமராக தெர்வு செய்யப்பட்டபோது, அவரை சந்திப்பதற்காக மகாராணியார் வந்திருந்தபோது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. 8ஆம் திகதி, மகாராணியார் இயற்கை எய்திவிட்டார். ஆகவே, இந்த புகைப்படம் சிறப்பு வாய்ந்த ஒரு புகைப்படமாக கருதப்படுகிறது.

மேலும், தன் தாய் இளவரசி கேட்டின் வாயை கையால் மூடும் குட்டி இளவரசர் லூயிஸின் புகைப்படம், மகாராணியாரின் அருகே நின்றபடி, விமானங்களின் சத்தத்தைக் கேட்டு காதை மூடிக்கொள்ளும் லூயிஸ், மன்னரானதும் தன் பணியைத் துவக்கும் சார்லஸ், கால்பந்து வீரர் மெஸ்ஸி உலகக்கோப்பையை பிடித்திருக்கும் புகைப்படம் மற்றும் உக்ரைன் போர் தொடர்பான படங்கள் ஆகியவை நாமினேஷனில் உள்ளன.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...