சர்ச்சையில் சிக்கிய நாமல்
இலங்கைசெய்திகள்

சர்ச்சையில் சிக்கிய நாமல்

Share

சர்ச்சையில் சிக்கிய நாமல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்கான மின்சார விநியோகம் தொடர்பான நிலுவைத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நளீன் ஹேவகே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே மின்சார சபை இவ்வாறு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 12 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வீரகெட்டிய இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்காக மின் உற்பத்திக்கான இயந்திரங்களை வழங்குவதற்காக 26 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் செலுத்தப்பட வேண்டுமெனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் 26 லட்சம் ரூபாய் நிலுவை மின்சாரக் கட்டணத்தை செலுத்துமாறு இலங்கை மின்சார சபை தமக்கோ அல்லது தனது தந்தைக்கோ இதுவரை அறிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திருமண விழாவுக்கான அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் தகவல் கேட்கவுள்ளதாக நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...