ராஜ குடும்பத்தில் நடைபெற இருக்கும் மிக முக்கிய நிகழ்ச்சி: ஹரி மேகனிற்கு அழைப்பில்லை
உலகம்செய்திகள்

ராஜ குடும்பத்தில் நடைபெற இருக்கும் மிக முக்கிய நிகழ்ச்சி: ஹரி மேகனிற்கு அழைப்பில்லை

Share

ராஜ குடும்பத்தில் நடைபெற இருக்கும் மிக முக்கிய நிகழ்ச்சி: ஹரி மேகனிற்கு அழைப்பில்லை

ராஜ குடும்பத்திற்கு அவமானத்தைக் கொண்டுவந்த இளவரசர் ஆண்ட்ரூ கூட தன் முன்னாள் மனைவியுடன் அந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொள்கிறார். ஆனால், இளவரசர் ஹரிக்கும் அவரது மனைவிக்கும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு இல்லை!

அடுத்த மாதம் 8ஆம் திகதியுடன், மன்னர் சார்லசின் தாயாகிய எலிசபெத் மகாராணியார் மரணமடைந்து ஒரு ஆண்டு முடிவடைகிறது.

மகாராணியார் மறைந்ததன் ஓராண்டு நிறைவை நினைவுகூறும் நிகழ்ச்சி ஒன்று, செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி பால்மோரல் மாளிகையில் நடைபெற உள்ளது. அதில், மன்னர் சார்லஸ், ராணி கமீலா உட்பட ராஜ குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனும்கூட அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில், மறைந்த மகாராணியாரின் செல்லப் பேரனான இளவரசர் ஹரிக்கும் அவரது மனைவியான மேகனுக்கும் மகாராணியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை.

இத்தனைக்கும், ஹரி, செப்டம்பர் 9ஆம் திகதி ஜேர்மனியில் துவங்க இருக்கும் இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைப்பதற்காக Düsseldorf நகருக்கு வருகிறார்.

ஆகவே, அவர் மகாராணியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் எளிதாக கலந்துகொள்ள முடியும். ஆக, ஹரி மகாராணியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியின்போது ஐரோப்பாவிலேயே இருந்தும் கூட அவருக்கு அழைப்பு இல்லை என கூறப்படுகிறது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...