எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்
இலங்கைசெய்திகள்

எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

Share

எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் நாளைய தினம் (04.08.2023) விலை அதிகரிப்பு அறிவிப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு ஏற்றவாறு இலங்கையிலும் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பிரீஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஒரு மெட்ரிக் தொன் எடையுடைய சமையல் எரிவாயுவின் உலக சந்தை விலை 85 டொலர்களால் உயர்வடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றம் உள்நாட்டு சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நாளைய தினம் சமையல் எரிவாயு விலை தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதத்திலும் லிட்ரோ நிறுவனம் விலை மாற்றம் தொடர்பில் அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...