குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்!
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்!

Share

குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்!

குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் அவர்களை தாமதமின்றி வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜி. விஜேசூரிய பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகள் தொடர்பில் சிலர் உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், எனவே குழந்தைகளை வைத்தியசாலைக்கு அழைத்துவர பெற்றோர் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததை முன்னிலைப்படுத்தி சிலர் வைத்தியசாலை தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

குழந்தையின் சத்திரசிகிச்சை தொடர்பான அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. கிருமிகள் உட்சென்றதால் குழந்தை உயிரிழந்துள்ளது.

இருப்பினும், வைத்தியசாலையில் தினமும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன,

மேலும் குழந்தைகளுக்கு எம்.ஆர்.ஐ. பரிசோதனைகள், CT பரிசோதனைகள் மற்றும் இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் குழந்தைகளுக்கு தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் வைத்தியசாலைக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...