12 வயது சிறுமி வன்கொடுமை.. உடலில் பற்காயங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
உலகம்செய்திகள்

12 வயது சிறுமி வன்கொடுமை.. உடலில் பற்காயங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

Share

12 வயது சிறுமி வன்கொடுமை.. உடலில் பற்காயங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பிறப்புறுப்பில் கடினமான பொருளை செருகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 வயது சிறுமி பலாத்காரம்
இந்திய மாநிலம் மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள கோயில் நகரமான மைஹரில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

மைஹர் நகரில் உள்ள ஒரு பிரபலமான கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையில் பணிபுரிந்த இருவர், 12 வயது சிறுமியை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கு அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து மிருகத்தனமாக நடந்துள்ளனர். சிறுமியின் உடலில் பற்களால் கடித்த ரத்த காயங்களும், பிறப்புறுப்பில் கடினமான பொருள் செருகியது போன்றும் காணப்பட்டுள்ளது.

அதிக இரத்தப்போக்கு, உடலில் கடித்த அடையாளங்களுடன், மருத்துவ சிகிச்சைக்காக ரேவா பிரிவு தலைமையகத்திலுள்ள மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.

ரவீந்திர குமார் மற்றும் அதுல் படோலியா ஆகியோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்தது. இவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குற்றவாளிகளின் வீடுகள் இடிப்பு
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மைஹார் முனிசிபல் கவுன்சிலின் தலைமை நகராட்சி அதிகாரி இருவரின் குடும்பங்களுக்கும் அவர்களது நிலம் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான ஆவணங்களைக் கோரி நோட்டீஸ் அனுப்பியதாக துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி (எஸ்டிஓபி) லோகேஷ் தபார் தெரிவித்தார்.

மேலும், விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகளும் சட்டவிரோதமானது என்று தெரியவந்தது.

படோலியாவின் வீடு விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அரசு நிலத்தில் கட்டப்பட்டது என்றும், ரவீந்திர குமாரின் வீடு அனுமதியின்றி கட்டப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகளையும் உள்ளூர் நிர்வாகம் இடித்துள்ளது.

காவல்துறை கொடுத்த விளக்கம்
முன்னதாக, காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) அசுதோஷ் குப்தா, “குற்றம் சாட்டப்பட்ட ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் படோலியா ஆகியோர் 12 வயது சிறுமியின் அந்தரங்கத்தில் குச்சி அல்லது வேறு ஏதேனும் பொருள் செருகப்பட்டதை நான் மறுக்கவில்லை.

ஆனால், இதனை மருத்துவ அறிக்கையில் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். சிறுமி, ரேவாவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மூத்த அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்றதாகவும்” கூறினார்.

தேவைப்படும் நேரத்தில் சிறுமியை மேல் சிகிச்சைக்காக போபால் அல்லது டெல்லிக்கு மாற்றப்படலாம் என்றும் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...

24112021 capsized ferry reuters
செய்திகள்இலங்கை

கிண்ணியா புதிய படகுப் பாதை தொடக்க விழாவில் விபத்து: கடலில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு இடையேயான புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது...

25 68f4d447e68d6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த: சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மேல் நீதிமன்றங்களாக மாற்றம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொழும்பு 7...