ரணிலை இரகசியமாக சந்தித்த மொட்டு எம்.பிக்கள்
இலங்கைசெய்திகள்

ரணிலை இரகசியமாக சந்தித்த மொட்டு எம்.பிக்கள்

Share

ரணிலை இரகசியமாக சந்தித்த மொட்டு எம்.பிக்கள்

புதிய அரசியல் கூட்டணியயை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமனற உறுப்பினர் நிமல் லான்சாவுடன் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில், கலந்துரையாடலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளன.

மேலும், அடுத்த ஆண்டு ஜனவரியில் இவர்களின் புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதிய கூட்டணியில் சேருவதற்கு லான்சாவுடன் பல கட்சிகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவற்றுள் மொட்டு கட்சியின் பிரதிநிதிகளும் அடங்குவதாக குறித்த அரசியல் வட்டங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் லான்சா, அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போது புதிய கூட்டணி அமைப்பது குறித்து அறிவித்துள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க, அமைச்சர் நளின் பெர்னாண்டோ, அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் ஏற்கனவே லான்சாவை சந்தித்து கூட்டணி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அரசியல் வட்டாரங்களினால் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...