பிரித்தானியா
உலகம்ஏனையவைசெய்திகள்

பிரித்தானியாவில் 7 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்: 14 வயது சிறுவன் கைது

Share

பிரித்தானியாவில் 7 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்: 14 வயது சிறுவன் கைது

பிரித்தானியாவில் 7 வயது சிறுமி விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததை தொடர்ந்து 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் வெஸ்ட் மிட்லாண்ட் பகுதியில் உள்ள வால்சால்(Walsall) சாலையில் 14 வயது சிறுவன் ஒருவர் 7 வயது சிறுமி மீது தன்னுடைய மோட்டார் பைக்-ஆல் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

இதில்  7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு இரவு 7 மணியளவில் விரைந்து சென்ற பொலிஸார் நிலைமையை ஆராய்ந்தனர்.

அத்துடன் விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்து நடந்த மாதிரியை உருவாக்கும் முயற்சியில் சிறுவன் ஓட்டிச் சென்ற நீலம் மற்றும் கருப்பு நிறம் கொண்ட மோட்டார் பைக்கை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு துப்பறிவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெஸ்ட் மிட்லாண்ட் பொலிஸ் அதிகாரி DS பால் ஹியூஸ் பேசிய போது, இது மிகவும் மோசமான நிகழ்வு இதன் விளைவாக அப்பாவி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஆனால் நாங்கள் இன்னும் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை தேடிக் கொண்டு இருக்கிறோம், எனக்கு தெரியும் இங்குள்ள உள்ளூர் மக்களுக்கு அந்த மோட்டார் சைக்கிள் எங்கு இருக்கும் என்று, எனக்கு தேவை எல்லாம் உள்ளூர் சமூகம் விசாரணைக்கு உதவ வேண்டும் என்பது தான்.

இது மக்களை பாதுகாப்பது பற்றியது அல்ல, சரியானவற்றை செய்வது பற்றியது என்று விசாரணை அதிகாரி பால் ஹியூஸ் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...