100 தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்து வியப்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்
இலங்கைசெய்திகள்

100 தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்து வியப்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்

Share

100 தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்து வியப்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்

ஜேர்மனியை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் 100வது தடவையாக இலங்கை வந்துள்ளார்.

ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயதுடையவரே இவ்வாறு இலங்கை வந்துள்ளார்.

அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில் இடம்பெற்றது.

சிங்கள மொழியை சரளமாகப் பேசக் கூடிய ஜோர்ஜ் சீலன் 1971 ஆம் ஆண்டு 19 வயது இளைஞனாக முதன்முறையாக இலங்கைக்கு வந்தார்.

அதன் பிறகு ஜோர்ஜ் சீலன் ஆண்டுதோறும் இந்நாட்டுக்கு வந்துள்ளார்.

திருமணமாகாத ஜோர்ஜ் சீலன் முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

‘‘இலங்கைக்கு வரும் ஒவ்வொரு முறையும் அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா போன்ற புராதன இடங்களைப் பார்வையிடச் செல்வேன்.

இலங்கையின் வீதி அமைப்பு தற்போது மிகவும் முன்னேறியுள்ளது. இலங்கை அன்றைய காலத்தை விட மிகவும் அபிவிருத்தியடைந்துள்ளது.

நூறாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...