வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்!
இலங்கைசெய்திகள்

வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்!

Share

வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்!

இலங்கையில் பல பகுதிகளில் சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“அஸ்வெசும” நலன்புரி வேலைத்திட்டத்தின் மூலம் கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வருவதுடன், கொடுப்பனவுகள் பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் ஜனாதிபதி அலுவலகம் முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இத்திட்டத்தில் பலர் நிராகரிக்கப்பட்டிருந்த காரணத்தால் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்கப்பட்டு நியாயமான முறையில் பயனாளிகளை உள்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.

முதற்கட்டமாக பயனாளிகளுக்கு விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

பின்பு அவர்களின் தகவல்களை சரிபார்ப்பதற்காக வீடுகளுக்குச் சென்று தரவு சேகரிப்பு செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து மேன்முறையீடுகள் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இவ்வாறான சூழலில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் நன்மையை பெறுவதற்குத் தேவையான வங்கிக் கணக்குகளை திறப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் தற்போது நீண்ட வரிசைகளை காண முடிவதாக கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 69806d6b7f392
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மயிலிட்டியில் சோகம்: இராணுவ வாகனம் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியில் இன்று (02) திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த...

1770042557 images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை கடற்பரப்பில் மீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியக் கடலோரக் காவல்படைக்கு அமைச்சர் கடும் கண்டனம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து இலங்கை மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய மனிதாபிமானமற்ற...

f255d14dbc86150d596e80f2fed4b9cb
செய்திகள்உலகம்

பாம்புக்கடி: ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு உயிர் பறிபோகிறது – அதிர்ச்சியூட்டும் அறிக்கை!

உலகப் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினத்தை (Neglected Tropical Diseases Day) முன்னிட்டு, Strike Out...

image ac09cfb2fa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெப்ரவரி 10 முதல் நிச்சயமாக 1,750 ரூபா சம்பளம்! – பிரதி அமைச்சர் பிரதீப் ஹட்டனில் உறுதி.

தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளம் எவ்விதப் போராட்டங்களுமின்றி...