வாய்த்தர்க்கம் முற்றியதால் கொலையில் முடிந்த அவலம்
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கம் முற்றியதால் கொலையில் முடிந்த அவலம்

Share

வாய்த்தர்க்கம் முற்றியதால் கொலையில் முடிந்த அவலம்

கொழும்பு – பாணந்துறையில் நண்பர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை – வாழை சந்தைக்கு முன்பாக நேற்றையதினம்(24.07.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பாணந்துறை – கெசல்வத்த கல்லுபர பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மொஹமட் ஆஷிஸ் மொஹமட் அக்ரம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மோதலில் பலத்த காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உயிரிழந்தவர் உடல்நிலை பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.

முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்த அனுமதி பெறுவது தொடர்பாக இருவருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையே பின்னர் மோதலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...