கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியாவை சீண்டும் அமெரிக்கா
உலகம்செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியாவை சீண்டும் அமெரிக்கா

Share

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியாவை சீண்டும் அமெரிக்கா

கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பலான ஒன்- அபோலிஸ் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியாவை சென்றடைந்த விடயம் சர்வதேச சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நீர்மூழ்கி கப்பல் நேற்றையதினம்(24.07.2023) தென்கொரியாவின் தென்பகுதித் தீவான ஜெஜு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.

கொரியப் போருக்குப் பின்னர், நாற்பதாண்டுகள் கழித்து, முதல் முறையாக, கடந்த வாரம் அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டது.

யுஎஸ்எஸ் கெண்டக்கி எனும் அமெரிக்காவின் குறித்த கப்பல் 1980ற்கு பின்னர் முதன்முறையாக தென்கொரியாவை சென்றடைந்துள்ளது.

வடகொரியாவின் அணுஆயுதத் தாக்குதலை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில், தென்கொரியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

இந்த தருணத்தில் யுஎஸ்எஸ் கெண்டக்கி கப்பல் மற்றும் தற்போது வருகை தந்துள்ள ஒன்- அபோலிஸ் கப்பல்களின் வருகையானது வடகொரியாவை அமெரிக்கா சீண்டுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் வருகையை எச்சரிக்கும் முகமாக வடகொரியா இரண்டு பொலிக்ஸ்ட்டிக் வகை ஏவுகணைகளை தென்கொரிய கடற்பரப்பில் செலுத்தி தங்கள் வலுவைக் காட்டியுள்ளது.

அதைத் தொடர்ந்தும் கடந்த சனிக்கிழமை தாழ்வாகப் பறந்து இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் சிறு இறக்கை ஏவுகணைகளையும் ஏவியுள்ளது.

இரண்டு தரப்பும் தங்களின் படை பலத்தைக் காட்டிவருவதால், கொரியத் தீபகற்பப் பகுதியில் போர்ப் பதற்றம் கூடியுள்ளது.

இந்த சூழலில், அமெரிக்கப் படைக்குச் சொந்தமான யுஎஸ்எஸ், ஒன்- அபோலிஸ் ஆகிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தென்கொரியாவுக்கு வருகைதந்துள்ளன.

மேலும் தற்போது வருகைதந்துள்ள நீர்மூழ்கிக் கப்பலானது இதற்கு முன்ன்ர் தென்கொரியாவிற்கு வருகைதந்த யுஎஸ்எஸ் கெண்டக்கி கப்பலை போல் இல்லை எனவும், அணு ஆயுதங்களைக் கொண்டது அல்ல என்றும், எதிரித் தரப்பு கப்பல்களை அழிக்கக்கூடியது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...