வவுனியாவை உலுக்கிய படுகொலை சம்பவத்தின் பின்னணி
இலங்கைசெய்திகள்

வவுனியாவை உலுக்கிய படுகொலை சம்பவத்தின் பின்னணி

Share

வவுனியாவை உலுக்கிய படுகொலை சம்பவத்தின் பின்னணி

வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்த சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

இந்த கும்பலுக்கு அவசியமான பிரபல குண்டர் ஒருவரையே தேடி வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் இந்த கும்பல் அந்த பிறந்த நாள் வீட்டிற்கு வந்த போது, ​​அவர்கள் தேடி வந்த நபர் விருந்தில் கலந்து கொண்டு அங்கிருந்து திரும்பியதால் ஆத்திரமடைந்த கும்பல் இந்த செயலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முகமூடி அணிந்து வந்த கும்பல் வீட்டிற்குள் நுழைவதனை அவதானித்த 21 வயதான பெண் கத்தி கூச்சலிட ஆரம்பித்தமையினால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்படும் என நினைத்து அவரை கத்தியால் குத்தி பின்னர் தீ வைத்துள்ளதாக சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஒருவரின் பெயர் சொல்லி அந்த நபர் குறித்த வீட்டில் இருக்கிறாரா என்று கேட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அப்போது வீட்டில் இருந்த அனைவரும் தீக்காயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் இருந்ததால், சம்பவம் எப்படி நடந்தது என்பது பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. எனவே தாக்குதலுக்கு வந்த கும்பலை அடையாளம் கண்டு கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கும்பலால் பெயர் கூறி தேடப்பட்ட நபர் வவுனியாவில் உள்ள பிரபல குண்டர் எனவும் பலரிடம் கப்பம் கேட்டு பணம் கொடுக்காததால் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

வவுனியா தோணிக்கல் பகுதியில் வசிக்கும் வர்த்தகரான சுரேஷ் என்பவரின் வீட்டின் மீதே இந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இங்கு அந்த வீட்டில் விருந்துக்கு வந்திருந்த சுரேஷின் உறவினரான 21 வயது பாத்திமா சசீமா சைதி உயிரிழந்துடன் மேலும் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த பத்து பேரில் நான்கு பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...