குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் காத்திருந்த தாய்: எழுந்த குற்றச்சாட்டு
இலங்கைசெய்திகள்

குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் காத்திருந்த தாய்: எழுந்த குற்றச்சாட்டு

Share

குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் காத்திருந்த தாய்: எழுந்த குற்றச்சாட்டு

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த மௌலீஸ் எனும் 9 மாத குழந்தை இன்றைய தினம் (24.07.2023) திங்கட்கிழமை தாய் பால் அருந்திய நிலையில் பால் புரைக்கேறி உள்ளது.

அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தை உயிரிழந்து விட்டது என வைத்தியர் அறிக்கையிட்டார்.

குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனை
குழந்தையின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் வைத்தியசாலையில் கோரியபோது , யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையை பெற்றே சடலத்தை கையளிக்கலாம் என நெடுந்தீவு வைத்தியசாலையில் கூறியுள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியை நெடுந்தீவு வைத்தியர் தொடர்பு கொண்டு கேட்ட போது, குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.

அதனை அடுத்து குழந்தையின் தாயிடம் குழந்தையின் சடலத்தை ஒப்படைத்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி
தாய் , தனது குழந்தையின் சடலத்துடன், நெடுந்தீவில் இருந்து படகில் குறிகாட்டுவான் பகுதிக்கு வந்து, அங்கிருந்து வேலணை வைத்தியசாலை நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து அதில் குழந்தையின் சடலத்துடன் தாய் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில், நோயாளர் காவு வண்டியில் எவ்வாறு சடலத்தை ஏற்ற முடியும் என கேள்வி எழுப்பி தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க விடாமல் பல மணிநேரம் குழந்தையின் சடலத்துடன் காக்க வைத்துள்ளனர்.

பின்னர் நீண்ட இழுபறியின் பின்னர் தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க அனுமதித்து, குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் ஒப்படைக்க அனுமதித்துள்ளனர்.

மனிதாபமானமின்றி, குழந்தையின் சடலத்துடன் தாயை நீண்ட நேரம் நோயாளர் காவு வண்டியினுள் காக்க வைத்தமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 97
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்” – டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

ஈரான் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் தனக்குத்தானே விதித்துக்கொண்ட காலக்கெடு செவ்வாய்க்கிழமை நெருங்கிக்கொண்டிருந்த...

Untitled 96
உலகம்செய்திகள்

நிலவின் மறுபக்கத்திலிருந்து பூமி: ஆர்டெமிஸ் II விண்கலக் குழுவினரின் வரலாற்றுச் சாதனைப் புகைப்படம் வெளியீடு!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் சென்றுள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ (Artemis...

Untitled 95
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லக்விஜய மின் நிலைய நிலக்கரி கொள்முதல்: விசேட தணிக்கை அறிக்கை வெளியீடு!

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக லங்கா நிலக்கரி நிறுவனம் மேற்கொண்ட நிலக்கரி கொள்முதல் செயல்முறை குறித்தும்,...

Untitled 94
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு நெருக்கடி: மக்களுக்குப் பாரிய நிவாரணத் தொகுப்பை அறிவித்தார் ஜனாதிபதி அனுர!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில், நடந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியால்...