மகிந்த பதவி விலகவில்லை! விரைவில் உண்மைகள்
இலங்கைசெய்திகள்

மகிந்த பதவி விலகவில்லை! விரைவில் உண்மைகள்

Share

மகிந்த பதவி விலகவில்லை! விரைவில் உண்மைகள்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவில்லை எனவும் பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விபரங்களை வெளியிடப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவத்தகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாங்கள் அமைச்சர் பதவிகளை கைவிட்டு தப்பி சென்றதாக கூறுகின்றார்கள்.

மறைந்திருந்ததாக கூறுகிறார்கள், மறைந்திருந்து தற்பொழுது மீண்டும் வந்ததாக கூறுகிறார்கள்.

நாங்கள் யாரும் மறைந்திருக்கவில்லை நாங்கள் யாரும் அமைச்சு பதவிகளை விட்டு விலகவும் இல்லை.

அமைச்சுப் பதவிகளை விட்டு விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது, மகிழ்ந்த ராஜபக்ச பதவி விலகவில்லை அவரை பதவி விலகச் செய்தார்கள், இந்த அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் துல்லியமான பதில்கள் வெளியிடப்படும்.

ஏனைய தரப்புக்களின் செயற்பாடுகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அனைத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் அமைதியாக இருக்கிறோம், யாராவது நினைத்தாள் நாம் அஞ்சு ஒளிந்து விட்டோம் என்று அது தவறு.

நாங்கள் அவ்வாறு பயந்து ஒளியக்கூடிய நபர்கள் இல்லை,

மக்கள் எம் மீது அன்பு வைத்திருக்கின்றார்கள் அனைத்து விடயங்களையும் நாம் விரைவில் அம்பலப்படுத்துவோம் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...