rtjy 257 scaled
இலங்கைசெய்திகள்

புதிய கடவுச்சீட்டு விண்ணப்ப முறை தொடர்பில் அறிவித்தல்

Share

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் புதிய இணைய விண்ணப்ப முறையின் மூலம் 35,000 இணையம் மூலமான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், 3700 கடவுச்சீட்டுகள் மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்தார்.

கடந்த ஜூலை 20 வரை பெறப்பட்ட 35,145 இணையம் மூலமான விண்ணப்பங்களில் 28,959 விண்ணப்பங்கள் சாதாரண சேவைக்காகவும், 14 நாட்களுக்குள் அனுப்பப்படும் கடவுச்சீட்டுக்களுக்காக 6,186 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.

எனினும் 35,145 இணைய மூலமான விண்ணப்பங்களில், 16,869 விண்ணப்பதாரர்கள் மட்டுமே நியமிக்கப்பட்ட பிரதேச செயலக அலுவலகத்தில் தங்கள் கைரேகைகளை வைத்துள்ளனர்.

இந்தநிலையில் 3,712 கடவுச்சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட சில விண்ணப்பங்களில், கைரேகையை வைக்கத் தேவையில்லை என்றாலும், கடவுசீட்டுக்களில் கையொப்பம் இடப்பட வேண்டிய கட்டாயப் படிவமான கையொப்பமிடப்பட்ட ஆவணத்தை பலர் பதிவேற்றவில்லை.

எனவே தெளிவான கையொப்பத்துடன் ஆவணத்தை மீண்டும் பதிவேற்ற விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...