செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கையில் ஏற்படும் மாற்றம்
இலங்கைசெய்திகள்

செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கையில் ஏற்படும் மாற்றம்

Share

செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கையில் ஏற்படும் மாற்றம்

இலங்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு இறப்பர் வர்த்தகர் சங்கத்தின் 104ஆவது வருடாந்த பொதுக்கூட்டமானது நேற்றைய தினம் (22.07.2023) இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களைபாரிய பொருளாதார நெருக்கடியில் இலங்கை! – சுமந்திரன் எச்சரிக்கை எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் மாற்றியமைக்கப் போவதில்லை.

வெளிப்படைத்தன்மையை உருவாக்க ஊழல் ஒழிப்புச் சட்டம், மத்திய வங்கி சுதந்திரமான முடிவுகளை எடுப்பதற்காக புதிய மத்திய வங்கிச் சட்டம் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.

இதனூடாக பொருளாதாரம் மிகவும் நம்பகமான திசையில் நகர்ந்து செல்கின்றமை உறுதியாகிறது.

இதன் விளைவாக எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் இலங்கை 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதமான பொருளாதார வளர்ச்சியை அடையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இலங்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் எதிர்கொள்ளும் மற்றொரு பொருளாதார நெருக்கடி தொடர்பில் வயம்ப பல்கலைக்கழகத்தின் கணக்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நெருக்கடியின் இரண்டாம் கட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பான ஒப்பந்தங்களில் குறைந்தது 39% இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இந்த நிலையில் 10% மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...