ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியா அறிவிப்பு
உலகம்செய்திகள்

ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியா அறிவிப்பு

Share

ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியா அறிவிப்பு

ஐந்து நாடுகளின் குடிமக்கள் புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, அந்த நாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

எந்தெந்த நாடுகள்?
அந்த நாடுகள், டொமினிக்கா, ஹோண்டூராஸ், நமீபியா, திமோர் – லெஸ்தே மற்றும் வாநுவாட்டு ஆகிய ஐந்து நாடுகள் ஆகும்.

இந்த விசா கட்டுப்பாடுகள் புலம்பெயர்தல் மற்றும் எல்லை பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே என்று கூறியுள்ள உள்துறைச் செயலாரன சுவெல்லா பிரேவர்மேன், இந்த கட்டுப்பாடுகள் அந்த நாடுகளுடனான உறவு சரியில்லை என்பதற்கான அடையாளம் அல்ல என்று கூறியுள்ளார்

காரணம் என்ன?
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் அனுப்பியுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில், டொமினிக்காவும் வானுவாட்டுவும் முதலீடு செய்வபர்களுக்கு குடியுரிமை வழங்குவது, புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்துவதை தெளிவாகக் காட்டுவதாக தெரிவித்துள்ளதுடன், அந்நாடுகள் பிரித்தானியாவுக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய நபர்களுக்கு குடியுரிமை வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல, நமீபியா மற்றும் ஹோண்டூராஸ் ஆகிய நாடுகளிலிருந்து பிரித்தானியா வருவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக தெரிவித்துள்ள பிரேவர்மேன், அந்நாட்டுக் குடிமக்களும் புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

திமோர் – லெஸ்தே குடிமக்களோ மோசடி செய்து பிரித்தானியாவில் வாழ முயல்வது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முறைப்படி பிரித்தானியா வர முன்பதிவு செய்துள்ளோர், மாற்றங்களுக்கு தயாராவதற்காக அவர்களுக்கு நான்கு வாரங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...