குறைந்த வருமானம் பெறுவோருக்காக அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறுவோருக்காக அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

Share

குறைந்த வருமானம் பெறுவோருக்காக அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

குறைந்த வருமானம் பெறும் மக்களை முன்னேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய கொள்கை நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த கொள்கைத் தீர்மானங்கள் முறையாக எடுக்கப்படாமையால், கடந்த காலங்களில் பொருளாதார சிக்கல்கள் பலவற்றை சந்திக்க வேண்டியிருந்தது.

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் தீவிர பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நலன்புரித் திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து இதன்போது மதிப்பாய்வு செய்யப்பட்டது. சிறுநீரக நோயாளர்கள், முதியோர் கொடுப்பனவிற்கான பதியப்பட்ட அனைவருக்கும் அந்த நன்மைகளை வழங்குமாறு அவர் ஆலோசனை வழங்கினார்.

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாட்டில் உள்ள அரச அதிகாரிகளின் தீவிர பங்களிப்பு அவசியமாகும். அதன்போது நன்மைகளை அடையாளம் காண்பது முறையாக இடம்பெறும்.

அஸ்வெசும நலத்திட்டத்தை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும்ரூபவ் ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க வலியுறுத்தினார்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...