சிறைச்சாலையிலி்ருந்து கைதி தப்பி ஓட்டம்
இலங்கைசெய்திகள்

சிறைச்சாலையிலி்ருந்து கைதி தப்பி ஓட்டம்

Share

சிறைச்சாலையிலி்ருந்து கைதி தப்பி ஓட்டம்

பல்லேகலையில் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் கம்பஹா, இஹலகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லேகலை – குண்டசாலை திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்தே இவர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அவதானித்த கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் அவர் சிறையில் இருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி எனவும் கம்பஹா பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலும் இவர் கொள்ளையடித்துள்ளதாகவும் பின்னர் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...