கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க கோரி அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை!! வெளியான தகவல்
அரசியல்இலங்கைஏனையவைசெய்திகள்

கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க கோரி அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை!! வெளியான தகவல்

Share

கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க கோரி அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை!! வெளியான தகவல்

ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பொதுச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக, கடன் வாங்கும் வரம்பை 9,000 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நாடாளுமன்றத்தின் அனுமதியை கோரியுள்ளது.

நாட்டிற்கான நிதி திரட்ட சர்வதேச சந்தைக்கான அணுகலை இழந்துள்ள நிலையில், உள்நாட்டு கடன்கள் மூலம் கடன் சேவை கொடுப்பனவுகள், தொடர்ச்சியான செலவுகள் மற்றும் நலன்புரி செலவுகளை ஈடுசெய்ய அரசாங்கத்திற்கு இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடன் பெறுவதற்கான உச்ச வரம்பு தற்போது 4,979 பில்லியனாக உள்ள நிலையில் 13,979 பில்லியனாக அதிகரிப்பதற்கான சட்டமூலத்தை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த புதன்கிழமை வெளியிட உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பொது நிதி தொடர்பான அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால், 2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதன் மூலம் திறைசேரி நடவடிக்கைகளின் சேவைச் செலவு மற்றும் மூலதனச் செலவினங்களை அதிகரிக்க, நாடாளுமன்றில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

1717386794 images
ஏனையவை

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரிப்பு22 பேர் உயிரிழப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...