பசிலின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்!
இலங்கைசெய்திகள்

பசிலின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்!

Share

பசிலின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்!

கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பசில் ராஜபக்ச கூட்டிய கூட்டத்திற்கு பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட தலைவர்கள் பிரசன்னமாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் இல்லத்தில் கடந்த 12ஆம் திகதி இந்த கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்வரும் அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்ககாக இந்த விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பசில் ராஜபக்சவின் பணிப்புரைக்கமைய செயலாளர் நாயகம் சாகர காரியவசத்தினால் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கூட்டத்தில் நாமல் ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தார்.

எனினும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம மற்றும் அனுராத ஜயரத்ன ஆகியோர் இந்த சந்திப்பை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த அரசியல் தலைவர்கள் பங்கேற்காததால், எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மீண்டுமொரு கலந்துரையாடலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...