கனடாவில் மாயமான இலங்கையர் சடலமாக மீட்பு!
உலகம்செய்திகள்

கனடாவில் மாயமான இலங்கையர் சடலமாக மீட்பு!

Share

கனடாவில் மாயமான இலங்கையர் சடலமாக மீட்பு!

கனடாவில் இலங்கையர் ஒருவர் மாயமான நிலையில், அவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள செய்தி அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Scarboroughவில் அவசர மருத்துவ உதவியாளராக பணியாற்றிவந்த இலங்கையரான அர்ஜனன் சிவசத்தியராஜா (Arjanan Sivasathiyarajah), பணி நிமித்தமாக படகில் சென்ற நிலையில் கடந்த 3ஆம் திகதி மாயமாகியுள்ளார்.

இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 5ஆம் திகதி, மாலை 5.00 மணியளவில், Kashechewan நதியில் அர்ஜனனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் நதியில் தவறிவிழுந்திருக்கலாம் என பொலிசார் கருதுகின்றார்கள்.

2017ஆம் ஆண்டு அர்ஜனனின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், தன் தந்தைக்கு தன்னால் எந்த உதவியும் செய்யமுடியவில்லையே என வருந்திய அர்ஜனன், அந்த சம்பவத்தின் தாக்கத்தால் அவசர மருத்துவ உதவியாளராக பணி செய்ய முடிவு செய்துள்ளார்.

அவர் புதிதாக பணியில் இணைந்து சில வாரங்களே ஆன நிலையில் தனக்குப் பிடித்த வேலையின்போதே மரணமடைந்துள்ளார்.

இந்த தகவலை அர்ஜனனின் சகோதரரான காஞ்சனன் (Kajanan Sivasathiyarajah) தெரிவித்துள்ளார்.

அர்ஜனன் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பணியில் இணைந்து சில வாரங்களே ஆன நிலையில், இளம் வயதில் தங்கள் பிள்ளையை இழந்துள்ள அவரது குடும்பத்தினரும் அவரது நண்பர்களும் மீளாத்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...