வரலாற்றில் ஒரே இரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கை!
இலங்கைசெய்திகள்

வரலாற்றில் ஒரே இரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கை!

Share

வரலாற்றில் ஒரே இரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கை!

கல்வித்துறையில் அடுத்த வருடத்திற்குள் மாற்றம் கொண்டு வரப்பட்டு 21ம் நூற்றாண்டுக்கு பொருத்தமான மாணவர்களை உருவாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10.07.2023) நடைபெற்ற ஊடக மாநாட்டில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள “சுரக்ஷா” மாணவர் காப்புறுதித் திட்டம் 2024ஆம் ஆண்டு முதல் மீள ஆரம்பிக்கப்படும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் கல்வியமைச்சு மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்படாமல் மாகாண அமைச்சரின் கீழேயே செயப்படுகின்றது. இந்தியா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் இவ்வாறான கல்வி முறையால் அந்நாட்டு பிள்ளைகளின் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

எமது நாட்டில் 399 பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகள் அனைத்தும் மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் உள்ளன. 2001ஆம் ஆண்டு ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

13வது அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது, இந்நாட்டில் 17 தேசிய பாடசாலைகளே இருந்தன. ஆனால் ஒவ்வொரு கல்வி அமைச்சரின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது சில அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலோ திடீரென தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆனால் அதன் ஊடாக தரமான கல்வி முறையொன்று தோற்றுவிக்கப்பட்டதாக கூற முடியாது. ஒரே இரவில் 28 தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட்ட சகாப்தம் வரலாற்றில் உள்ளது. ஆனால், தற்போது கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறைக்குப் பதிலாக மாணவர்களை மையப்படுத்திய கல்வி முறையொன்று அவசியமாகின்றது. நிலையான மற்றும் தரமிக்க கல்வித்துறையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பல மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போதைய ஜனாதிபதி, பிரதமராக இருந்த போது முன்வைத்த 13 பிளஸ் (13+) கல்வித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம்.

கல்வித் துறையை விரிவுபடுத்துவதற்கான தெரிவுக் குழு அமைக்கப்பட்டு அதற்கான முன்மொழிவுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி எதிர்காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து கல்வித்துறையை விரிவுபடுத்த தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும்.

பெருந்தோட்ட மக்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், தோட்டப் பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை ஆசிரியர்களாக பயிற்றுவிக்கும் பயிற்சிப் பல்கலைக்கழகமொன்றை கொட்டகலை பிரதேசத்தில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை மேற்பார்வை செய்யும் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இவ்வாறான அனைத்து விடயங்களுடனும் அடுத்த வருடத்தில் இருந்து கல்வித்துறையில் மாற்றத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...