இலங்கை - தாய்லாந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவை
இலங்கைசெய்திகள்

இலங்கை – தாய்லாந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவை

Share

இலங்கை – தாய்லாந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவை

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான குறைந்த கட்டண நேரடி விமான சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எயார் ஏசியாவின் AIQ-140 விமானம் தாய்லாந்தின் Don Mueang சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று இரவு 10.10 மணியளவில் வந்தடைந்துள்ளது.

அந்த விமானத்தில் 134 பயணிகள் மற்றும் 07 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.

மேலும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 174 பயணிகளுடன் தாய்லாந்து திரும்பியது.

அதற்கமைய, தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்திற்கு 04 விமானங்கள் சேவையில் ஈடுபடுவதுடன், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் குறித்த விமானங்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தையும் பயணிகளையும் வரவேற்கும் வைபவம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...