rtjy 86 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

Share

இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 24,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையின்படி, ஜூலை மாதத்தில் இதுவரை 23,901 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் மொத்தம் 100,388 சுற்றுலாப் பயணிகள் வந்ததாக அதிகார சபை குறிப்பிட்டது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 648,775 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கக்கூடிய சுற்றுலாத்துறை இன்று படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்த ஆண்டின் முதல் மாதம் தொடக்கம், இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இலங்கையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, இந்த ஆண்டின் (2023) ஜனவரி மாதம் 102,545 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததுடன், கடந்த பெப்ரவரி மாதம் 107,639 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 210,184 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டில் மார்ச் மாதத்திற்கு மாத்திரமே ஒரு இலட்சத்தைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.

இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு 106,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தார்கள்.

ஏனைய 11 மாதங்களிலும் ஒரு இலட்சத்திற்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வருகை தந்திருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 24,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....