rtjy 86 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

Share

இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 24,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையின்படி, ஜூலை மாதத்தில் இதுவரை 23,901 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் மொத்தம் 100,388 சுற்றுலாப் பயணிகள் வந்ததாக அதிகார சபை குறிப்பிட்டது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 648,775 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கக்கூடிய சுற்றுலாத்துறை இன்று படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்த ஆண்டின் முதல் மாதம் தொடக்கம், இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இலங்கையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, இந்த ஆண்டின் (2023) ஜனவரி மாதம் 102,545 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததுடன், கடந்த பெப்ரவரி மாதம் 107,639 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 210,184 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டில் மார்ச் மாதத்திற்கு மாத்திரமே ஒரு இலட்சத்தைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.

இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு 106,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தார்கள்.

ஏனைய 11 மாதங்களிலும் ஒரு இலட்சத்திற்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வருகை தந்திருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 24,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...