tamilni 142 scaled
உலகம்செய்திகள்

வான் தாக்குதலில் கொத்தாக கொல்லப்பட்ட பலர்

Share

வான் தாக்குதலில் கொத்தாக கொல்லப்பட்ட பலர்

சூடான் ராணுவம் தலைநகர் மீது முன்னெடுத்த வான் தாக்குதலில், பெண்கள் சிறார்கள் என கொத்தாக 22 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.சூடானின் ஓம்டுர்மான் மாவட்டத்தின் தார் எஸ் சலாம் என்ற பகுதியிலேயே ராணுவம் வான் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே, சூடான் ராணுவமும் துணை ராணுவப்படையினரும், தலைநகரை கைப்பற்றும் நோக்கில் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் துணை ராணுவம் வெளியிட்டுள்ள தகவலில், பலி எண்ணிக்கை 31 என குறிப்பிட்டுள்ளது.

மட்டுமின்றி, அப்பாவி மக்களின் குடியிருப்புகளும் இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக துணை ராணுவம் குறிப்பிட்டுள்ளது. சூடான் தலைநகர் கார்டூமின் பெரும்பகுதியையும் அதன் இரட்டை நகரங்களான ஓம்டுர்மன் மற்றும் பஹ்ரியையும் துணை ராணுவப்படையினரே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

சூடான் ராணுவத்தினர் அடிக்கடி தரை வழித் தாக்குதலையும், வான் தாக்குதலையும் முன்னெடுத்து துணை ராணுவத்தினரை சிதறடித்து வருகின்றனர். ஆனால் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்பது, ஒரு தாக்குதலால் ஏற்பட்ட மிகப்பெரிய உயிரிழப்புகளில் ஒன்று என குறிப்பிடுகின்றனர்.

12 வாரங்களாக நீடிக்கும் இந்த சண்டையால், தலைநகரில் வாழும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அங்காடிகள் மற்றும் சந்தைகள் அரிதாகவே திறந்திருக்கும் நிலை உருவாகியுள்ளதுடன் கிட்டத்தட்ட அனைத்து மருத்துவ சுகாதார மையங்களும் மூடப்பட்டுள்ளன.

மட்டுமின்றி, நாடு முழுவதும், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...