rtjy 52 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு!

Share

பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு!

அனுராதபுரம் – கலென்பிடுனுவெவ பொலிஸ் பிரிவில் விபரீத முடிவினால் உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணத்திற்கான காரணத்தை பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் – கலென்பிடுனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுருலு நிக்கா லேக் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் விஷம் அருந்தியதன் காரணமாக ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட 15 வயதுடைய மாணவி அப்பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பவராவார்.

குறித்த மாணவி பாடசாலைக்கு வீட்டில் உடைந்து காணப்பட்ட தொலைபேசியை பெற்றோருக்கு தெரியாமல் திருத்தி,சிம் அட்டையொன்றினையும் வாங்கி செலுத்தி இளைஞரொருவருக்கு பாடசாலையில் வைத்து கதைத்து வந்துள்ளார்.

இதனை அவதானித்த அதிபர் உடனடியாக மாணவியை எச்சரித்து தொலைபேசியை பறித்து, நாளைய தினம் பாடசாலைக்கு பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

இதன் காரணமாக மனம் உடைந்த மாணவி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தினை அருந்தி தவறான முடிவை எடுத்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவியின் மரணம் தொடர்பில் தந்தையான எஸ்.ஜி.சிரிசேன வாக்குமூலம் வழங்கியுள்ளதுடன், மாணவியின் தற்கொலைக்கு தொலைபேசி பாவனையே காரணம் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை போன்று எதிர்காலத்தில் எந்தவொரு தந்தையும் பிள்ளையை இழக்கக்கூடாது எனவும்,பிள்ளைகளிடமிருந்து தொலைபேசி பாவனையை முற்றான அகற்றுமாறும் ஏனைய பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...