கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட பிரதமர்
உலகம்செய்திகள்

கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட பிரதமர்

Share

கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட பிரதமர்

ஜிஎஸ்டி கிரெட்டிற்கு தகுதியான கனேடியர்கள் மளிகை தள்ளுபடி பெறுவது இன்று தொடங்குகிறது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கனடாவில் ஜிஎஸ்டி கிரெட்டிற்கு தகுதியானவர்கள், மளிகைப் பொருட்களின் விலை உயர்வுக்கு உதவ இன்று சிறப்புக் கட்டணத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கனேடியர்களுக்கு உணவு பணவீக்கத்தை சமாளிக்க மளிகைப் பொருட்கள் தள்ளுபடி உதவும் என்று பட்ஜெட்டில் உறுதி அளிக்கப்பட்டது. இதன்மூலம் சுமார் 11 மில்லியன் கனேடியர்கள் வழக்கமான ஜிஎஸ்டி கிரெடிட் கட்டணத்துடன் கூடுதல் பணத்தைப் பெறுவார்கள் என்று கனடா வருவாய் முகமை கூறுகிறது.

இந்நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘மளிகைப் பொருட்கள் தள்ளுபடி கட்டணம் இன்று தொடங்குகிறது. இரண்டு குழந்தைகளுடன் தகுதியுள்ள தம்பதிகள் கூடுதல் 467 டொலர்கள் வரையும், ஒற்றைக் குழந்தை உடைய கனேடியர்கள் கூடுதல் 234 டொலர்கள் வரையும், மூத்தவர்கள் சராசரியாக 225 டொலர்கள் வரையும் பயன்பெறுவார்கள்’ என தனது பதிவில் கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...