சிறுவர்கள் உட்பட்ட பிரித்தானியர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
உலகம்செய்திகள்

சிறுவர்கள் உட்பட்ட பிரித்தானியர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Share

சிறுவர்கள் உட்பட்ட பிரித்தானியர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

பிரித்தானியர்கள் பலர் கிரீஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், நடுக்கடலில் அவர்களுடைய படகு தீப்பிடித்ததால் அவர்கள் கடலில் குதிக்கும் கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

கிரீஸ் தீவுகளில் ஒன்றான Rhodes தீவுக்கு பிரித்தானியர்கள் பலர் சுற்றுலா சென்றிருந்தார்கள். அப்போது, கடற்கரையிலிருந்து 300 மீற்றர் தொலைவில் அவர்கள் படகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த படகில் திடீரென தீப்பற்றியது.

உடனடியாக லைஃப் ஜாக்கெட்களை அவர்களுக்குக் கொடுத்த படகின் கேப்டன், அவர்கள் அனைவரையும் கடலில் குதிக்க உத்தரவிட்டுள்ளார். அவர்களில் சிறுவர்களும் அடக்கம்.

எல்லை பாதுகாப்புப் படையினர் படகில் பயணித்த 82 பேரையும், பலரை கடலிலிருந்தும், சிலரை எரிந்துகொண்டிருக்கும் படகிலிருந்தும் மீட்டதாக தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் அந்த படகில் பயணித்த சிறுபிள்ளைகளை பெரிதும் பாதித்துள்ளது.

அவர்கள் பயத்திலும் அதிர்ச்சியிலுமிருந்து விடுபட நீண்ட காலம் ஆகலாம். தீயை அணைக்க ஊழியர்கள் முயற்சி செய்தும், அது முழுவதும் மரத்தால் செய்யப்பட்ட படகு என்பதால் தீயை அணைக்கமுடியாமல் போயுள்ளது. அந்த படகு முழுமையாகவே தீயில் எரிந்து நாசமாகிவிட்டது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...