சிறுவர்கள் உட்பட்ட பிரித்தானியர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
உலகம்செய்திகள்

சிறுவர்கள் உட்பட்ட பிரித்தானியர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Share

சிறுவர்கள் உட்பட்ட பிரித்தானியர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

பிரித்தானியர்கள் பலர் கிரீஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், நடுக்கடலில் அவர்களுடைய படகு தீப்பிடித்ததால் அவர்கள் கடலில் குதிக்கும் கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

கிரீஸ் தீவுகளில் ஒன்றான Rhodes தீவுக்கு பிரித்தானியர்கள் பலர் சுற்றுலா சென்றிருந்தார்கள். அப்போது, கடற்கரையிலிருந்து 300 மீற்றர் தொலைவில் அவர்கள் படகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த படகில் திடீரென தீப்பற்றியது.

உடனடியாக லைஃப் ஜாக்கெட்களை அவர்களுக்குக் கொடுத்த படகின் கேப்டன், அவர்கள் அனைவரையும் கடலில் குதிக்க உத்தரவிட்டுள்ளார். அவர்களில் சிறுவர்களும் அடக்கம்.

எல்லை பாதுகாப்புப் படையினர் படகில் பயணித்த 82 பேரையும், பலரை கடலிலிருந்தும், சிலரை எரிந்துகொண்டிருக்கும் படகிலிருந்தும் மீட்டதாக தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் அந்த படகில் பயணித்த சிறுபிள்ளைகளை பெரிதும் பாதித்துள்ளது.

அவர்கள் பயத்திலும் அதிர்ச்சியிலுமிருந்து விடுபட நீண்ட காலம் ஆகலாம். தீயை அணைக்க ஊழியர்கள் முயற்சி செய்தும், அது முழுவதும் மரத்தால் செய்யப்பட்ட படகு என்பதால் தீயை அணைக்கமுடியாமல் போயுள்ளது. அந்த படகு முழுமையாகவே தீயில் எரிந்து நாசமாகிவிட்டது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...