இளம் பெண் படுகொலை
உலகம்செய்திகள்

லண்டனில் இந்திய இளம் பெண் படுகொலை!

Share

இளம் பெண் படுகொலை – லண்டன்.

லண்டனில் கொலைச் செய்யப்பட்ட இந்திய வம்சாவளி இளம் பெண்ணின் வழக்கிற்கான தீர்ப்பு செப்டெம்பர் மாதம் வழங்கப்படும் என லண்டன் பழைய பெய்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர், குறித்த பெண்ணை கொலை செய்ததை பழைய பெய்லி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்தே லண்டன் பழைய பெய்லி நீதிமன்றம் மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.

இந்திய வம்சாவளி இளம் பெண்ணான 19 வயதுடைய சபீதா, லண்டனில் குடியிருப்பு ஒன்றில் தங்கி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

கடந்த ஆண்டு, மார்ச் மாதம் 19ஆம் திகதி, அதிகாலை 5.10 மணியளவில் சபீதா கூக்குரலிடும் சத்தம் கேட்டு, அருகிலுள்ள குடியிருப்பிலுள்ளவர்கள் சத்தம் கேட்ட இடத்திற்கு வந்து பார்க்கும் போது, சபீதாவின் அறையிலிருந்து இளைஞர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

தீர்ப்பிற்கான திகதி அறிவிப்பு
தகவலறிந்து பொலிஸார் அங்கு வந்தபோது சபீதா கழுத்தறுபட்ட நிலையில் போர்வைகளின் கீழ் கிடப்பதைக் கண்டுள்ளனர். மருத்துவ உதவிக்குழுவினர் காப்பாற்ற முயன்றும் பலனின்றி சம்பவதினத்தன்று காலை 6.00 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் கொலையாளியை தீவிரமாகத் தேடி வந்த நிலையில் தோட்டம் ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த 23 வயதுடைய மஹர் என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பொலிஸார் அவரை கைது செய்ய முயலும் போது, அவசர உதவிக்குழுவினர் ஒருவரையும் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் அந்நபர் சபீதாவை கொலை செய்ததை பழைய பெய்லி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை சபீதா கொலை செய்யப்படுவதற்கு முன், இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளார்கள் என்பது விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...