பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு
உலகம்செய்திகள்

பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

Share

பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு!

ஒரு வருடத்தில் பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

ராஜ குடும்பத்தின் செலவுகளுக்காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2022 -23) ராஜ குடும்பத்தின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை, 86.3 மில்லியன் பவுண்டுகள்.

2021 – 22 காலகட்டத்திற்கும் இதே தொகைதான் ஒதுக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு செலவோ 107.5 மில்லியன் பவுண்டுகள்! இந்த தொகை கடந்த ஆண்டைவிட செலவு 5 சதவிகிதம், அதாவது, 21 மில்லியன் பவுண்டுகள் அதிகம் ஆகும்.

பக்கிங்காம் அரண்மனையைப் புதுப்பித்தல், மறைந்த மகாராணியார் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளுக்கான செலவு, மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவுக்கான செலவு என இந்த ஆண்டு அதிக செலவானதுடன், பணவீக்கமும் அதற்கு ஒரு காரணம் என்கிறார்கள் அரண்மனை அலுவலர்கள்.

பக்கிங்காம் அரண்மனை புதுப்பிக்கப்படுவதற்காக இந்த ஆண்டு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை 34.5 மில்லியன் பவுண்டுகள். பக்கிங்காம் அரண்மனையின் புதுப்பித்தலுக்காக 10 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகையோ 369 மில்லியன் பவுண்டுகள். ஆனால், தற்போது அங்கு யாரும் வாழ்வில்லை.

புதுப்பித்தல் பணி முடிந்தபின் மன்னர் சார்லசும், ராணி கமீலாவும் பக்கிங்காம் அரண்மனையில் வாழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...