Untitled 1 104 scaled
உலகம்செய்திகள்

பிரான்சில் வெடித்த கலவரம் : 150 பேர் அதிரடியாக கைது

Share

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு வெடித்த வன்முறையில் இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியான நாண்டெர்ரே-வில் போக்குவரத்து நிறுத்தத்தில் 17 வயதுடைய நெயில் எம்(Nael m) என்ற கார் சாரதி பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர், இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததை தொடர்ந்து அப்பகுதியில் இரவோடு இரவாக 1200 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதல் நாள் இரவு நடந்த வன்முறையில் 31 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர், அத்துடன் இதில் 25 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததுடன் 40 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு வெடித்த வன்முறை இரண்டாவது நாள் இரவும் தொடரும் நிலையில் 150 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின்(Gerald Darmanin) வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வன்முறையில் டஜன் கணக்கான பொலிஸார் காயமடைந்து இருப்பதாகவும், குடியரசின் சின்னங்களான பள்ளிகள், காவல் நிலையங்கள் போன்றவை தீ வைத்து எரிக்கப்பட்டன என்றும் அமைச்சர் டார்மானின் தனது ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 2000 பொலிஸார் பாதுகாப்பு பணிகளுக்காக பாரிஸ் நகரில் குவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமைச்சர்களுடனான அவசர கூட்டத்தை வியாழக்கிழமை கூட்டி இருப்பதாக அவரது அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...