aquadome scaled
உலகம்செய்திகள்

உலகின் மிகப்பெரிய சொகுசு பயணக் கப்பல் ரெடி

Share

உலகின் மிகப்பெரிய சொகுசு பயணக் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

‘ஐகான் ஆஃப் தி சீஸ்’

இந்த கப்பலின் பெயர் Icon of the Seas, 365 மீட்டர் (சுமார் 1,200 அடி) நீளமும் 2,50,800 டன் எடையும் கொண்டது.

இந்த கப்பலில் உலகின் மிகப்பெரிய நீர் பூங்கா, 9 நீர்ச்சுழல்கள், 7 குளங்கள் மற்றும் உணவு மற்றும் பொழுதுபோக்கிற்காக நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

கப்பலில் 5,610 பயணிகள் மற்றும் 2,350 பணியாளர்கள் என மொத்தம் 7,960 பேர் பயணிக்கலாம். 28 வகையான தங்குமிடங்கள் உள்ளன.

தனியாக பயணம் செய்பவர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான பின்லாந்தின் டர்குவில் உள்ள மேயர் டர்கு கப்பல் கட்டும் தளத்தில் இந்தக் கப்பல் கட்டப்பட்டது. இந்தக் கப்பல் அக்டோபரில் முழுமையாக ஏவப்பட்டு 2024 ஜனவரியில் தனது முதல் பயணத்தை மேற்கொள்ளும்.

இந்த கப்பல் ராயல் கரீபியன் பயண நெட்வொர்க்கில் சேர்க்கப்படும் என்று ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் தலைவரும் தலைமை நிர்வாகியுமான மைக்கேல் பெய்லி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜூன் 22-ம் திகதிக்குள் முதல் கட்ட நீர் சோதனை முடிந்துவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

இன்ஜின், ஹல், பிரேக் சிஸ்டம் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றின் திறன் பல மைல்கள் பயணம் செய்து சரிபார்க்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட சோதனைகளும் 2023 இறுதிக்குள் நிறைவடையும். அதன்பிறகு 2024 ஜனவரியில் முதல் பயணத்தை தொடங்கும் என அறிவிப்பட்டுள்ளது.

‘ஐகான் ஆஃப் தி சீஸ்’ – உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் என்ற முத்திரையைக் கொண்டிருக்கும்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 1 8
செய்திகள்இலங்கை

வவுனியாவில் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணை ஆரம்பம்: வட்டி, போதைப்பொருள் விற்பனை மூலம் அபகரித்த சொத்துக்கள் இலக்கு!

சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்த நபர்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து தற்போது வவுனியாவிலும் காவல்துறையினரால் விசாரணைகள்...

image 37812857b2
இலங்கைசெய்திகள்

வாகன விலைகள் ராக்கெட் வேகத்தில் உயரும்: 15% வரி தள்ளுபடி நீக்கப்படலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் வாகன இறக்குமதி விலைகள் வரம்புகளைத் தாண்டி அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்...

images 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு: நவம்பர் 17 அன்று அனைத்துத் தரப்பினரும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, நேற்று (ஒக்டோபர் 27)...

19sex 17509
செய்திகள்இலங்கை

சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு: 9 மாதங்களில் 7,677 முறைப்பாடுகள் – பாலியல் அத்துமீறல்கள் 414 ஆக பதிவு

2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக 414...