ஜன்னல் இல்லாத அறையில் பதுங்கிய வாக்னர் கூலிப்படை தலைவன்
உலகம்செய்திகள்

ஜன்னல் இல்லாத அறையில் பதுங்கிய வாக்னர் கூலிப்படை தலைவன்

Share

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படையின் தலைவன் தற்போது ஜன்னல் இல்லாத அறையில் உயிருக்கு பயந்து பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்னை எதிர்ப்பவர்களை எதிரிகள் போல பாவிக்கும் விளாடிமிர் புடினால் தாம் படுகொலை செய்யப்படலாம் என வாக்னர் கூலிப்படை தலைவன் யெவ்கெனி ப்ரிகோஜின் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னரும் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 62 வயதாகும் ப்ரிகோஜின் ஜன்னல் இல்லாத அறைக்குள் தஞ்சமடைந்துள்ளார் என அமெரிக்க உளவுத்துறை நிபுணர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

ரஷ்ய கைப்பாவை நாடான பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் தற்போது ப்ரிகோஜின் தங்கியிருப்பதாக தகவல் வெளியானது. ஆயுத கிளர்ச்சியை கைவிட ப்ரிகோஜின் ஒப்புக்கொண்ட நிலையில், நாட்டைவிட்டு வெளியேற ரஷ்ய அரசாங்கம் அவருக்கு அனுமதி அளித்தது.

மட்டுமின்றி, வாக்னர் கூலிப்படையினர் முன்னெடுத்த கிளர்ச்சியின் போது 15 ரஷ்ய விமானிகளை கொன்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ப்ரிகோஜின் தற்போது துரோகி என விளாடிமிர் புடினால் ஒதுக்கப்பட்டுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய பின்னர், புடினின் செயல்பாடுகளை விமர்சித்தவர்கள் என்பதால் பல முக்கியஸ்தர்கள், ஜன்னலில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த சம்பவங்கள் சமீப மாதங்களாக நிகழ்ந்துள்ளது.

ஆனால், அவை அனைத்தும் விபத்துகள் என்றே ரஷ்ய தரப்பு குறிப்பிட்டு வருகிறது. இந்த நிலையில் தான், அப்படியான ஒரு நெருக்கடியில் சிக்காமல் இருக்க ப்ரிகோஜின் ஜன்னல் இல்லாத அறையில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ரஷ்யாவில் வாக்னர் கூலிப்படை தலைவர்களுக்கு எதிராக கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. துரோகிகள் அழிக்கப்பட வேண்டும் என புடின் ஆதரவு ராணுவ அதிகாரிகள் கொந்தளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், வாக்னர் கூலிப்படை முன்னெடுத்த கிளர்ச்சியை தடுத்து நிறுத்த தாமே நடவடிக்கை முன்னெடுத்ததாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, விளாடிமிர் புடினை பகைத்துக் கொள்வதால் ஒரு மூட்டைப் பூச்சி போல நசுக்கப்படுவீர்கள் என ப்ரிகோஜினை எச்சரித்ததாகவும் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...