lTgdBnR8G1VEtfQgJE0e 1
உலகம்செய்திகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நாள்!

Share

சிங்கள  பேரினவாத அரசினால் 2009 மே மாதம் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் 18.05.2023  பெல்சியம் அன்ற்வெப்பனில் பகல் 13.30 மணியளவில் பெரும் திரளான தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் ஒன்றுகூடி நினைவு நிகழ்வும் பேரணியும் அத்துடன் கண்காட்சியும் இடம்பெற்றது.

உணர்வெழுச்சியுடன் மக்கள் பெரும் அதிர்வலையாக கோசம் எழுப்பியபடி பேரணி அன்றவெப்பன் நகரைச் சுற்றி வந்து opera plein எனுமிடத்தில் நிகழ்விற்காக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் முடிவடைந்து,

வணக்க நிகழ்வு இடம் பெற்றது . 2009 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மக்களுக்காக பொதுச்சுடரேற்றி அகவணக்கம் மலர்வணக்கம் செலுத்தி பெல்சிய நாட்டு மொழியிலும் தமிழ் மொழியிலும்  படுகொலை பற்றி நினைவுரையாற்றப்பட்டது.

அத்துடன் 2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற இன அழிப்பின் சிறு நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டது.

அத்துடன் முள்ளிவாய்க்காலில் மக்களின் பசியாற்றிய கஞ்சி அதே உணர்வுடன் மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...