download 15 1 3
உலகம்செய்திகள்

ஆபாசமாக புகைப்படம் எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை!

Share

ஆபாசமாக புகைப்படம் எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை!

பாலியல் வன்முறை மற்றும் பாலியல் வல்லுறவிற்கு  எதிரான நடவடிக்கையை ஜப்பான் அரசு தீவிரமாக்கி வருகின்றது.

திருமணம் செய்வதற்கான  வயதை அதிகரித்தல்,  பாலியல் வல்லுறவு பற்றிய வரையறையை மறுசீரமைப்பது மற்றும்  தண்டனையை கடுமையாக்குவது போன்ற  பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் திருமணத்துக்கான உரிய வயது ஜப்பானில் மிகவும்  குறைவாகவே காணப்படுகின்றது.  ஜி7  நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகவும்.

2019 இல்  அதிகளவான  பாலியல் குற்றங்களில், குற்றங்களை நிரூபிக்க முடியாததைக்  கண்டித்து, அங்கு மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு சீர்திருத்தத்தினை  அந்நாடு மேற்கொண்டு வர தீர்மானித்துள்ளது.

அந்த வகையில், அதன் ஒரு அங்கமாக , மற்றவர்களின் முறையான அனுமதியின்றி பாலியல் மோகத்துடன் புகைப்படங்கள் மற்றும்  வீடியோக்களை எடுப்பதற்கு  தடை விதிக்கும் மசோதாவை ஜப்பான் நாடாளுமன்றம்  கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பாலியல் மோகத்தை தூண்டும்  புகைப்படங்களால் எண்ணற்ற குழந்தைகளும், பெண் விளையாட்டு வீரர்களும், விமானப் பணி பெண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால்,  பாலியல் இச்சையைத் தூண்டக்கூடிய வகையில் புகைப்படம் எடுப்பதை இச்சட்டம் தடை செய்கின்றது.

ஒரு பெண் உடை மாற்றும் செய்கின்ற பொழுதோ  அல்லது பாலுறவில் இருக்கும் பொழுதோ  அவரை ரகசியமாக படம் பிடிப்பதும்  குற்றமாக கூறப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தின் மூலம் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 3 மில்லியன் ஜப்பானிய யென் (£17,500; $22,000) வரை அபராதம் விதிக்கப்படும் என்பதுடன்  இந்த ஆண்டு ஜூன் மாதம் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...