images 2 1
உலகம்செய்திகள்

பஞ்சுக்குள் சிக்கிய மர்மம்!

Share

பஞ்சுக்குள் சிக்கிய மர்மம்!

பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு தடைசெய்யப்பட்ட சிகரெட் பெட்டிகளை சுங்கவரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது ச்சுங்கவரித்துறையினரால் இவ்வருடத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய தொகையாகும்.

இச்சம்பவம் தெற்கு பிரான்சின் Millau (Aveyron) நகரில் இடம்பெற்றுள்ளது.

புதன்கிழமை மாலை A75 நெடுஞ்சாலையில் சுங்கவரித்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான பார ஊர்தி ஒன்று பயணிப்பதை பார்த்து, அதனை தடுத்து நிறுத்தினர்.

சாரதியிடம் விசாரணைகள் மேற்கொண்டபோது, முகக்கவச்சம் தயாரிப்பதற்குரிய பஞ்சுகளை ஏற்றிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.

அவரது பதிலில் திருத்தியடையாத சுங்கவரித்துறையினர், பார ஊர்தியின் பெட்டியை திறந்த சோதனை செய்தனர். அதன்போது, பஞ்சுப்பெட்டிகளுக்கு பின்னால் சிகரெட் பெட்டிகள் மறைத்து எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது.

பிரான்சில் விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ள சிகரெட்டுகளே இவ்வாறு மறைத்து எடுத்துச்செல்லப்பட்டிருந்தன. மொத்தமாக 8,903 பொதிகளில் 1,780 கிலோ எடையுள்ள சிகரெட் பெட்டிகள் மீட்கப்பட்டன.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...